ராகம்: கௌரிமனோகரி
வரிகள்: கலைவாணி ராஜகுமாரன்
கண்களால் எழுதிடும் கவிதையே காதலோ
கருத்தினால் இதயங்கள் கலப்பதே காதலோ
பெண்களின் அழகினால் பிறப்பது காதலோ
பிரிந்தபின் நினைவொடு வாழ்வது காதலோ
இரவும் பகலும் உரசும் பொழுதில்
இறங்கியதே மண்ணில் ஈரம்
அந்த மழையின் அழகிடை தெரிந்த விழியால்
ஏறியதே நெஞ்சில் பாரம்
ஜன்னலின் ஓரம் பார்த்திருந்தேன் - என்
ஜன்மங்கள் ஏழும் காத்திருப்பேன் - இரவும்
உள்ளே உலவும் கவிதைபோலே
உள்ளே விழியால் இறங்கிவிட்டான்
முள்ளாய் பூவாய் அவனின் நினைவு
உறுத்தும் இனிக்கும் அது ஏனோ - இரவும்
மலையைத் தழுவும் மேகம் போலே
மனசைத் தழுவி விரைந்துவிட்டான்
வலியாய் சுகமாய் வளரும் போழுது
வருத்தும் இனிக்கும் அது ஏனோ - இரவும்
காதலா இது அஞ்சுகின்றேன்
கைதொட கரைந்தால் என்ன செய்வேன்
நட்பாய் இருந்தால் அதைநான் அறிவேன்
நட்பில் துயரே இல்லையடி - இரவும்
ஏதெனவே ஒரு இலக்கணத்துள்
இருவிழிச் சாரலை அடக்கிவிடு
வேதனை தீர்ந்து போகும் ஆனால்
வேதனை எனக்கு வேண்டுமடி -இரவும்